எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

பாரதிதாசன் - தமிழ் கவிஞர் புகைப்படம்

பாரதிதாசன் (Bharathidasan) வரலாறு

த்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னையில் இயற்கை எய்தினார்.  ஏப்ரல் 22 ஆம் நாள் அவரது உடல் புதுவை மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாரதிதாசனின் புகழ்பெற்ற பாடல்கள் சில 

பாவேந்தர் பாரதிதாசனின் முதல் பாட்டு சக்தி பாட்டு என்று அழைக்கப்படுகிறது. மகாகவி பாரதியாரின் முன் அவர் பாடிய பாடல்:

எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா! – அங்குத்

தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்த

தாயின் கைப்பந்தென ஓடுமடா – ஒரு

கங்குலில் ஏழு முகிலினமும் – வந்து

கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? – எனில்

மங்கை நகைத்த ஒலியெனலாம் – அவள்

மந்த நகையங்கு மின்னுதடா!


இயற்கை 

பாரதிதாசனின் அழகு கவிதை:

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! 

கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், 

தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற 

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந் 

தனில் அந்த 'அழகெ'ன்பாள் கவிதை தந்தாள்.

சிறு குழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; 

திருவிளக்கில் சிரிக்கின்றாள், நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் 

நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் 

புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்; என் 

நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.

திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறத்துச் 

செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன்  யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும் 

அழகுதனைக் கண்டேன் நல்லின்பங் கண்டேன்.
« Previous Page 2 of 13 Next »