எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

பாரதிதாசன் - தமிழ் கவிஞர் புகைப்படம்

பாரதிதாசன் (Bharathidasan) வரலாறு

தும் ஓயும்! 

  செயல்கண்ட கண்ணும் ஓயும்! 

மறவரைச் சுமக்கும் என்றன் 

  மன மட்டும் ஓய்தலில்லை!

முதியவள் நன்றாய் தூங்கினாளா:

குடித்தோமே பாலின் கஞ்சி;

குறட்பாவின் இரண்டு செய்யுள்

படித்தோமே, அவற்றி னுக்கு

விரிவுரை பலவும் ஆய்ந்து

முடித்தோமே! மொணமொ ணென்று

மணிப்போறி சரியாய்ப் பத்தும்

குறித்தது துயின்றேன்;இப்போ(து)

அழைத்தீர்கள் விழித்தேன் என்றாள்.


தாரும் மின்னும் மீனும் வருந்தும்:

கொம்பென்றால் அவள்மெய்யைத் தார்வ ருந்தும்!

கொடிஎன்றால் அவளிடையை மின்வ ருந்தும்! 

அம்பென்றால் அவள்விழியை மீன்வ ருந்தும்!

அலைஎன்றால் அவள்குழலை முகில்வ ருந்தும்!

செம்பென்றால் பொன்ஈயும் வாழ்வு வாய்ந்தாள்

செயல்என்றால் "உளம்வாய்மெய் உனக்கே ஆகும்

நம்பென்பாள்!" எனக்குத்தா னோஅல் லாது

நலிவுற்றுச் சாகத்தான் பிறந்திட் டேனோ!

தமிழ் 

தமிழின் இனிமை:

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 

கழையிடை ஏறிய சாறும், 

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் 

பாகிடை ஏறிய சுவையும், 

நனிபசு பொழியும் பாலும் - தென்னை 

நல்கிய குளிரிள நீரும், 

இனியன என்பேன் எனினும் - தமிழை 

என்னுயிர் என்பேன் கண்டீர் ! 


தமிழின்பம்:

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

« Previous Page 6 of 13 Next »