சினிமாப் பாடலாசிரியர்கள் வரலாறு
ன வேண்டுமடா…
ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ?
உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக? _ நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக?
கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக? _ மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக
சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா!
குளிரடிக்கிற குழந்தைமேலே துணியப்போடடுப் போத்துனா
குவாக்குவான்னு கத்தினதாலே முதுகிலரெண்டு சாத்துனா
கிலுகிலுப்பயக் கையில்கொடுத்து அழுதபிள்ளையைத் தேத்துனா
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்
கடந்தபின்னே அமைதி எங்கு பெறுவான்? - காலம்
கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்?
அன்புமயில் ஆடலுக்கு மேடையமைத்தான்
துன்பமெனும் நாடகத்தைக் கண்டு ரசித்தான்
கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே-என்
காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
ஏழைக்குக் காலம் சரியில்லே
கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன்(Kannadasan) அவர்களின் காலம் 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன். இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி என்கிற தம்பதிக்கு 8வது மகனாக பிறந்தார்.ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். 1980ம் ஆண்டு இவர் சாகித்ய அகாதமி விருது சேரமான் காதலி படைப்பிற்காகப் பெற்றார்.
கண்ணதாசன் திரைப் பாடல்கள் மட்டுமல்லாமல் காப்பியங்கள், தனிக் கவிதை தொகுப்புகள், சிற்றிலக்கியங்கள், கவிதை நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், சிறு கதைகள், அர்த்தமுள்ள இந்து மதம், உரைகள் ஆகிய பலவற்றை படைத்தது இலக்கிய தொண்டாற்றியுள்ளார்.
முத்தையா என்கிற கண்ணதாசனின் முத்தான மிகச்சில வரிகள்:
அவருடைய
“நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே” என்னும் வரி அவருடைய காவிய தாயின் மூத்த மகன் கம்பனுக்கே வாராத கற்பனை.
கோப்பையில் என் குடியிருப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!
காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்!
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை!
அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா! அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!
காலையில் மலரும் தாமரைப் பூ! அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்
கோட்டை கட்டி வா வா வா
மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில் தேனெடுத்து வா வா வா..
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம் நாம்
பறந்து செல்கின்றோம் !
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம்
அழகழகாய் படிக்குதப்பா
அச்சடித்த காகிதத்த
அடுக்கடுக்காய் சுமக்குதப்பா
எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க…வாழ்க…
வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க…வாழ்க…
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்