icon

Winner Janani Natarajan

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

Janani Natarajan எழுதிய வரிகள்:

தீண்டாதே எங்கள் நெற்றி செந்தூரம்!
சீண்டாதே எம்மை, எட்டி செல் தூரம்!

நகையாதே! எம் திண்மை என்றும் தளராதே!
சீறாதே! எம் சிரம் என்றும் பணியாதே!
திமிறாதே! எம் போர் திறன் தாழாதே!
ஊடுருவாதே! எம் தேசம் உமை மன்னிக்காதே!

வெகுளாதே! தோல்வி எங்கள் அகராதியில் கிடையாதே!
பிழறாதே! வஞ்சனை ஒரு போதும் வெல்லாதே!
மறவாதே! எம் ஒற்றுமை என்றும் மாறாதே!
மடியாதே! எம் கொடி என்றும் வீழாதே!





வெற்றியாளர் Janani Natarajan என்ன கூறுகிறார்

ஒரு சரணம்
அறமாகும் வார்த்தையில் மனம் மலராகும்.
மலராகும் வார்த்தையில் மனம் வசமாகும்.
வசமாகும் வார்த்தையில் மனம் வயமாகும்.
வயமாகும் வார்த்தையில் மனம் நிறைவாகும்.
நிறைவாகும் வார்த்தையில் தனம் வரவாகும்.
வரவாகும் வார்த்தைகள் ஒரு வரமாகும்.
வரமாகும் வார்த்தைகள் இனி சரளமாகும்
அதற்கு முதற்பல்லவி ஒரு சரணமாகும்.