icon

Winner கி.சத்தியன்.

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தானா தந்ததன தானனா தன தானனா

தானா தந்ததன தானனா தன தானனா


தானா தானன தானனா தானா தானன தானனா

தானா தானன தானனா தானா தானன தானனா

தானா தானன தானனா தானா தானன தானனா

தானா தானன தானனா தானா தானன தானனா


தானா தந்ததன தானனா தன தானனா

தானா தந்ததன தானனா தன தானனா


தானா தானன தானனா தானா தானன தானனா

தானா தானன தானனா தானா தானன தானனா

தானா தானன தானனா தானா தானன தானனா

தானா தானன தானனா தானா தானன தானனா


கி.சத்தியன். எழுதிய வரிகள்:

பல்லவி:

தேவா அன்புப்பெருக் காலென்ஆ சையும் கூடுதே
தேனா இன்பச்செருக் காலென்மீ சையும் ஆடுதே

சரணம்:
தானா ஓரிளங் கோதையால்
வாய்த்தேன் ஊன்சுகம் நூறுதான்
வேனா வேளையில் சாரலால்
ஆழ்ந்தேன் வான்முகி லாகநான்
ஏனோ வாழ்வது போதைபோல்
பார்த்தேன்..! மாதவம் ஆகையால்
வானோர் ஈடென வாழ்த்தவே
வாழ்வேன் ஈங்கவை ஆசையால்

( தேவா அன்பு..)

தாளா வாஞ்சையுள் தோன்றுமோர்
தாயாய் பாடுதென் ஜீவனே!
மாளா ஆவலுள் ஈன்றதோர்
சேயாய் ஆடுதென் நாடியே!
வீழா பாசத்துள் பூத்ததோர்
பூவாய் ஆனதென் தேகமே!
தேயா மாண்பினுள் ஊர்ந்ததோர்
நாவாய் ஓடுதென் வாழ்க்கையே!

( தேவா அன்பு...)

வேனா - வேனிற் காலம்





வெற்றியாளர் கி.சத்தியன். என்ன கூறுகிறார்

வணக்கம். 


சிறுவயதில் இருந்தே தமிழின்பால் அதீத ஈடுபாடு எனக்கு உண்டு. கவிதை புனைவது எனக்கு  பிடிக்கும். கற்பனைக் குதிரையை அவ்வபோது அவிழ்த்து விடுவேன். நிறைய கவிதைகள் குப்பைக்காகிதமாக்கி கொண்டேன்


படிக்கிற காலம் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றுள்ளேன். ஆனாலும் ஆதங்கம். ஏக்கம். 


ஒருமுறை முகநூல் பக்கங்களில் சுற்றிஅலைந்தேன். என் கண்களில் பளிச்சிட்டது ஒரு சரணம் இணையதளம் மின்னலென விழித்தேன். எனக்கு பிடித்தமான அந்த தளத்தையே சுற்றி சுற்றி வந்தேன் அருமையான கவிதை பிறந்தது சந்தக்கவிதைகள் இயல்பாகவே எனக்கு வரும். எளிமையான என் கவி நடைக்கு ஏற்றாற்போல் உள்ள சந்தக்கவிதை

ஒரு சரணம் இணையதளத்திற்கு அனுப்பினேன். என் கவிதைக்கு முதல் பரிசு என என் காதுகளுக்கு எட்டியதும்  நான் பெற்ற மகிழ்ச்சி அபரிமிதமானது


இத்தளத்தை உருவாக்கி என் போன்றோருக்கு வழிகாட்டும் உன்னத இந்த குழுமத்திற்கு என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். மீண்டும் நன்றிகள் பல.