
Winner கி.சத்தியன்.
- வகை:சந்தப்பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
தானா தந்ததன தானனா தன தானனா
தானா தந்ததன தானனா தன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தந்ததன தானனா தன தானனா
தானா தந்ததன தானனா தன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
கி.சத்தியன். எழுதிய வரிகள்:
தேவா அன்புப்பெருக் காலென்ஆ சையும் கூடுதே
தேனா இன்பச்செருக் காலென்மீ சையும் ஆடுதே
சரணம்:
தானா ஓரிளங் கோதையால்
வாய்த்தேன் ஊன்சுகம் நூறுதான்
வேனா வேளையில் சாரலால்
ஆழ்ந்தேன் வான்முகி லாகநான்
ஏனோ வாழ்வது போதைபோல்
பார்த்தேன்..! மாதவம் ஆகையால்
வானோர் ஈடென வாழ்த்தவே
வாழ்வேன் ஈங்கவை ஆசையால்
( தேவா அன்பு..)
தாளா வாஞ்சையுள் தோன்றுமோர்
தாயாய் பாடுதென் ஜீவனே!
மாளா ஆவலுள் ஈன்றதோர்
சேயாய் ஆடுதென் நாடியே!
வீழா பாசத்துள் பூத்ததோர்
பூவாய் ஆனதென் தேகமே!
தேயா மாண்பினுள் ஊர்ந்ததோர்
நாவாய் ஓடுதென் வாழ்க்கையே!
( தேவா அன்பு...)
வேனா - வேனிற் காலம்