Winner கி.சத்தியன்.
- வகை:சந்தப்பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
தானன தன்நன்ன னானா - தன
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானன தன்நன்ன னானா - தன
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானன தன்நன்ன னானா - தன
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
கி.சத்தியன். எழுதிய வரிகள்:
ஆருயி ரென்றென்னில் பூத்தாய்!-- மனம்
ஆறுதல் தந்தென்னைக் காத்தாய்!
சரணம்
ஏனோ! சொந்தம்என் றுனக் கென நானே
ஆதியில் வந்திங்கு ஆனேன்!
தேனா தித்திக்கும் கரும் பெனத் தானே
வேறெவ ரும்எங்கும் காணேன்!
( ஆருயிரென்...)
மூச்சாய் எந்தன்இன் னுயிர் கலந் தேநீ
ஆள்கிற நல்லின்பப் பேறே!
ஆச்சே, எந்தன்அன் பினில் பிறந் தேநீ
வாழ்கிற பொன்சிற்பத் தேரே!
( ஆருயிரென்...)
ஆரோ!! அன்னத்தின் எழில் விழி யேநீ
தூளியில் சொர்க்கம்வெல் வாயே!
ஏறே!! வெண்சங்கின் ஒலி யிசை யேநீ
வாழிய!! நற்கல்வி யாலே!
( ஆருயிரென்...)
