Winner K Sivakumar
- வகை:சந்தப்பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
தானன தன்நன்ன னானா - தன
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானன தன்நன்ன னானா - தன
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானன தன்நன்ன னானா - தன
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
K Sivakumar எழுதிய வரிகள்:
சேயென வந்திங்கு நீயே-ஒரு
தாயெனும் பந்தம் தந் தாயே.
பூவாய் இம் மண்ணில் புது மலர் ஆனாய்!
பொழுதும் என் நெஞ்சில் தேனாய்.
காணா இன்பத்தில் என துயி ரானாய்!
காலமும் உன் அன்பைத் தாராய்.
சேயென வந்திங்கு நீயே-ஒரு
தாயெனும் பந்தம் தந் தாயே.
தேனாய்த் தித்திக்க எனை அழைப் பாயே.
தேடிடும் இன்பம் தந்தாயே..
கோனாய்த் திக்கெட்டும் புகழடைவாயே.
தேவனும் உன் பக்கம் சேயே.
சேயென வந்திங்கு நீயே-ஒரு
தாயெனும் பந்தம் தந் தாயே.
மானாய் உன் அன்னை மடி அமர்ந் தாயே
தேனென தித்திக்க நீயே!
வீழா நிற்கின்ற தமிழ் மொழி போலே
வாழணும் இம் மண்ணின் மேலே.
சேயென வந்திங்கு நீயே-ஒரு
தாயெனும் பந்தம்தந் தாயே.
கோ. சிவகுமார், சென்னை.
