icon

Winner K Sivakumar

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

தானநன தானநன தானநன தானநன தானா 

தானநன தானநன தானநன தானநன தானா


தனனநன தானனநன  தனனநன தானனநன தானா

தனனநன தானனநன  தனனநன தானனநன தானா

தனனநன தானனநன  தனனநன தானனநன தானா

தனனநன தானனநன  தனனநன தானனநன தானா


தானநன தானநன தானநன தானநன தானா 

தானநன தானநன தானநன தானநன தானா


தனனநன தானனநன  தனனநன தானனநன தானா

தனனநன தானனநன  தனனநன தானனநன தானா

தனனநன தானனநன  தனனநன தானனநன தானா

தனனநன தானனநன  தனனநன தானனநன தானா

K Sivakumar எழுதிய வரிகள்:

பாடிவரும் சோலைக்குயில் போல மனம் பாடிடுது தானே!
ஆடி வரும்தோகை மயில் போல பதம் ஆடிடுது தானே!

சரணம் 1

கனவு இது வோவெனமனம் ஒருநிமிடம்
வாடிடும் நிலை ஏனோ?
நனவு இது தானென மனம் உணருவதும்
தேவனின் அருள் தானோ!
மனது அது பூமழைதனில் நனையுமொரு
நாளிது சுப நாளோ!
எனது மன வானிலும் இனி இருளகற்றும் சூரியஒளி நாளோ!


பாடிவரும் சோலைக்குயில் போல மனம்
பாடிடுது தானே!
ஆடி வரும்தோகை மயில் போல பதம்
ஆடிடுது தானே!

சரணம் 2

எனது உடல் மானென மிக உயரமிகத் தாவிட மகிழ் வேனே!
எனது மன வீணையில் இனி புதியதொரு
ராகமும் இசைப் பேனே!
எனது மன ஆலயம் உறை கடவுளருள்
கூடிவருவ தாலே!
எனது வருங் காலமும் இனி வசந்தமென
ஆகிடும் புவி மேலே!


பாடிவரும் சோலைக்குயில் போல மனம்
பாடிடுது தானே!
ஆடி வரும்தோகை மயில் போல பதம்
ஆடிடுது தானே!


கோ. சிவகுமார், சென்னை.





வெற்றியாளர் K Sivakumar என்ன கூறுகிறார்

அன்புள்ள ஐயா. 

என்னுடைய கவிதையை பரிசுக் கவிதையாகத் தேர்ந்தெடுத்து பாராட்டி கவுரவித்ததற்கு மிக்க நன்றி. 

சிறு வயது முதல் கண்ணதாசன் பாடல்களை விரும்பிக் கேட்பேன். 
பாடலின் எளிமையும் கருத்தாழமிக்கச் சொற்களும் என்னை வாலிப வயதில் மிகவும் ஈர்த்தன. 
அவ்வப்போது சிறு குறு கவிதைகள் எழுதி பாராட்டுக்கள் பெற்றுள்ளேன்.  

அன்று ஒருநாள் யதேச்சையாக வலைத்தளங்களில் கவிதைப் போட்டி பற்றி தேடும் போது தங்களின்  ஒரு சரணம். காம் வலைதளம் கண்ணில் பட்டது. என்னுடைய பாடல் எழுதும் பசிக்கு தீனி போடும் விதமான சுவையான கவிதைப் போட்டிகள் கண்டு இன்புற்றேன். 'அடடா, இதுநாள்  தெரியாமல் போச்சே' என்று எண்ணத் தோன்றியது. 

ஆர்வமுடன் கலந்து கொண்டேன். பரிசும் பெற்றேன்.மகிழ்ச்சி.
தொடர்ந்து பாடல் எழுதி மேலும் பல பரிசுகளைப் பெறுவேன் என நம்புகின்றேன். 

தங்களின் இந்த அரிய சேவை பல கவிஞர்களை  ஊக்குவித்து வெளியுலகற்கு அறிமுகப்படுத்தும் 
தளமாக அமைந்திருக்கிறது  கண்டு மிகவும் மகிழ்ச்சி. 

பணி தொடரட்டும்! 
பரிசு மழை பொழியட்டும்

நன்றி. 
கோ. சிவகுமார்