எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

திருவள்ளுவர்

திருவள்ளுவர் வரலாறு

திருவள்ளுவரின் இயற்பெயர் மற்றும் அவர் வாழ்ந்த ஊர், இடம் சரியாகத் தெரியவில்லை. கி.மு. முதல் நூற்றாண்டில் தற்போதைய சென்னைக்கு அருகில் உள்ள மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்றும், காவிரிப்பாக்கம் அருகில் உள்ள மார்க்செயன் அவரது புதல்வியான வாசுகியை வள்ளுவருக்குத்  திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டு அரசு இவர் பிறந்த ஆண்டாக கி.மு 31ஐ அறிவித்து அதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடுகிறது.

திருவள்ளுவர், திருக்குறளைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

திருக்குறள் தவிர மருத்துவம் மற்றும் ஜோதிட நூல்களான ஞான வெட்டியான், பஞ்ச ரத்னம், சுந்தர சேகரம் ஆகியவற்றை எழுதியவர் பெயரும் திருவள்ளுவர் என்று அறியப்படுகிறது.

திருக்குறள் 

திருக்குறள் வேற்றுக் கலப்பில்லாத குறள் வெண்பா ஒன்றாலேயே ஆனது.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கில் அறம் நான்கையும் தருவது, பொருள் வீடு நீங்கலாக மூன்றையும் தருவது, இன்பம் இன்பம் ஒன்றையே உணர்த்துவது என்பதோடு வீடு பேற்றை அறத்துனுள் அடக்கி அறத்துப்பால் , பொருட்பால் , காமத்துப்பால் என பிரித்துத் தலைப்பிட்டு நூல் செய்துள்ளார்.


திருக்குறள் முப்பாலினுள் அறத்துப்பாலைப் பாயிரம் - இல்லறவியல் - துறவறவியல் - ஊழ் என நான்கு வகையாகவும், பொருட்பாலை அரசியல் - அமைச்சியல் - பொருளியல் - நட்பியல் - துன்பவியல் - குடியியல் என ஆறு வகையாகவும், காமத்துப்பாலைக் களவியல் - கற்பியல் என இரண்டு வகையாகவும் பிரித்திருக்கின்றனர்; வேறு வகையான பிரிவினைகளும் உண்டு.

அறத்துப்பால்

பாயிரவியல்

கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

அகரம் ஆகிய முதலை உடையன எழுத்துக்கள் எல்லாம் ; அதுபோல ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்தது உலகம் . அகரமாகிய நாதம் இயற்கையின் பிறப்பது, அதன் விகாரத்தால் பிறப்பது ஏனைய ஒலிகள். அகரம்போல் முழு இயற்கை அறிவினன் இறை


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

கற்றதனால் வருகின்ற மயக்க அறிவை தெளிவிக்க இயற்கை அறிவினை தொழுதல் வேண்டும் 


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

தொழுதலின் பலன் மட்டுமன்றி,  ஐம்பொறிகளின்(மெய் வாய் கண் மூக்கு செவி) வழியாக வரும் ஐம்புலன்(ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை)  இன்பத்தின் கண் செல்லும் மனநெகிழ்ச்சியை அடக்கி பொய் நீங்கிய ஒழுக்க நெறியில் நின்றார் நீடு வாழ்வார்

விருப்பு வெறுப்பு இல்லாத இறையினை சேர்ந்தார்க்கு எத்தகைய சூழ்நிலையிலும் துன்பம் இல்லை என்பதோடு இருள் நிறைந்த இருவினைகளும் அவரை சேராது.

« Previous Page 1 of 6 Next »