எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

திருவள்ளுவர்

திருவள்ளுவர் வரலாறு

ternates: normal; font-variant-numeric: normal; font-variant-east-asian: normal; font-variant-position: normal; vertical-align: baseline;">.

கடல் நீர் உலகின் கண் விரிந்து கிடந்தும், மழை பொய்த்துவிட்டால் உலகம் பசியால் துன்புறும். 


ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

மேகம் மழையை வாரி வழங்குதலைத் தவிர்த்தால் உழவர் ஏர்கொண்டு உழுதல் தடைப்படும்.


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

வேண்டாத பொழுது பெய்து / அதிகமாகப் பெய்து /  பெய்யாமல் கெடுப்பதும், அவ்வாறு கெட்டபேரைத் தான் சரியாய் அளவில் மற்றும் நேரத்தில் பெய்து உய்யச் செய்ய வல்லதும்  மழை.


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

மழையானது பெய்யாவிடின், இவ்வுலகில் பச்சை புல் நுனியுங்கூடக் காண்பது அரிது, நெடிய கடலும் தனது தன்மை குறையும்


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.

மழை பெய்யாதாயின், வானோர்க்கு இவ்வுலகின் மக்களான் செய்யப்படும் சிறப்பு விழாவும் நித்திய பூசனைகளும் நடவாது, விரிந்த உலகின் கண் இல்லறத்தார் கடமையாகிய தானமும் துறவறத்தார் கடமையாகிய ஆன்ம விசாரத் தவமும் உளவாகா, நீரின்றி இவ்வுலகம் நடைபெறாதது போல் ஒழுக்க நெறி உலகின் கண் அமையாது.


மழை உணவை அளித்துப் பசித் துன்பம் நீக்கி அமிழ்தாய் செயல்படுகிறது. கெடுக்கவும் வாழ்விக்கவும் வல்லது மழை. இறை செயலான மழை, இவ்வுலக அறம் பொருள் இன்பத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதோடு, மழை பெய்யாதாயின், நெடிய கடலும் தனது தன்மை குறையும், வானோர்க்கு இவ்வுலகின் மக்களான் செய்யப்படும் சிறப்பு விழாவும் நித்திய பூசனைகளும் நடவாது, விரிந்த உலகின் கண் இல்லறத்தார் கடமையாகிய தானமும் துறவறத்தார் கடமையாகிய ஆன்ம விசாரத் தவமும் உளவாகா, ஒழுக்க நெறி உலகின் கண் அமையாது என்பனவற்றை இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

நூல்கள், ஒழுக்கத்தின் கண்ணே நின்று எல்லாம் துறந்தாரது பெருமையை வேண்டியும் சுட்டியும் நிற்கும்.

   

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

யான் எனது என்கிற இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எ

« Previous Page 3 of 6 Next »