எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

Kambar, the celebrated Tamil poet and author of the Ramayanam

கம்பர் வரலாறு

கவிச்சக்ரவர்த்தி கம்பர்(Kambar) மயிலாடுதுறை மாவட்டம் திருவழுந்தூர் (எ) தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் என்று அறியப்படுகிறது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் காலம் மற்றும் வரலாறு

பொதுவாக மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் காலமான கி.பி. 12ஆம் நூற்றாண்டே கம்பருடைய காலம் என்றும், சிலர் இவருடைய காலம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டு என்றும் கருதுகின்றனர். கம்பருடைய தந்தை பெயர் ஆதித்தன் என்று கூறப்படுகிறது.

கம்பரை முதலில் ஆதரித்தவர் டையப்ப வள்ளல் என்பவர். பின்பே சோழ மன்னன் கம்பரை ஆதரித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.

கம்பனின் மகன் கவிஞனான அம்பிகாபதி, சோழ மன்னனின் மகளான அமராவதி என்பவளைக் காதலித்ததாகவும், இதன் காரணமாகச் சோழ மன்னன் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இதனால் மனமுடைந்த கம்பர் சோழ நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் சென்று விட்டதாக அறியப்படுகிறது. அவர் தனது இறுதி நாட்களைச் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே கழித்ததாகச் சான்றுகள் கூறுகின்றன.

கவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார் என்று தெரிகிறது.

"கம்பன் வீட்டுக் கட்டுத்தறிய

« Previous Page 1 of 18 Next »