ில் கோடியே- அளவற்ற கோடிக் கணக்கானவை.
தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பில் நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு: அல்லன் மகளிர் மேனியே.
தணிமலர்த் திருமகள் - குளிர்ந்த தாமரைப் பூவில் வாழும் இலக்குமி தேவி; தங்கும் மாளிகை- தங்கியிருக்கும் அயோத்தி நகர மாளிகைகள்; இணர் ஒளிபரப்பி நின்று- மிக்க ஒளி வீசி நின்று; இருள் துரப்பன-இருளை ஓட்டுபவை; திணிசுடர் நெய்யுடைத் தீவிளக்கமோ- செறிந்த ஒளியுடைய நெய்விளக்குகளின் விளக்கமோ; மணிவிளக்கல்ல-
மணிகளின் ஒளியோ அல்ல; மகளிர் மேனியே- அந்நகரத்து மகளிரின் மேனி ஒளியே.
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்.
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்.
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்.
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம் - சிற்றரசர்கள் கப்பத்தை எண்ணி அளவிடும் மண்டபங்களும்; அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் - அன்னம் போன்ற நடையையுடைய மாதர்கள் ஆடும் மண்டபங்களும்; உன்னரும் அருமறை ஓதும் மண்டபம் - அருமறை ஓதும் மண்டபங்களும்; பன்னரும் கலைதெரிபட்டி மண்டபம் - கலைகளையும் அறிஞர்கள் ஆராயும் பட்டி மண்டபங்களும் அயோத்தி நகரெங்கும் இருந்தன.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இலை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின்- நல்ல கலை நூல்களைப் படிக்காது நிற்பவர்கள் இல்லை ; கல்வி முற்ற வல்லாரும் இல்லை- கல்வியில் முற்றும் வல்லவர்களும் அங்கு இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை- அக் கல்வித் துறைகளில் வல்லவரும் இல்லாதவரும் இல்லை; எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே- எல்லோரும் எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே; இல்லரும் இல்லை உடையார்களும் இல்லை-அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை உடையவர்களும் இல்லை. இந்தப் பாடலின் சிறப்பு ஒன்று இல்லாமையான் வருவது அதன் எதிர்மறை என்பதின் உண்மை கூறல்.
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.
தாய் ஒக்கும் அன்பின் -அன்பு செலுத்துவதில் தாயை ஒப்பவனாவான்; தவம் ஒக்கும் நலம் பயப்பின் - நன்மை செய்வதில் தவத்தைப் போன்றவன்; சேய் ஒக்கும் - பெற்ற மகனை ஒத்திருப்பான்; முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரான்- கடைசிக் காலத்தில் முன்னே நின்று இறுதிச்சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும் தன்மையினால்; நோய் ஒக்கும் என்னின் - குடிமக்களுக்கு நோய்வருமாயின்; மருந்து ஒக்கும் - அதைப் போக்கி. குணப்படுத்தும் மருந்து போன்றவன்; நுணங்கு கேள்வி ஆயப்புகுந்தால்- நுணுக்கமான கலைத்துறைகளை ஆராயப்புகுந்தால் ; அறிவு ஒக்கும்- நுண் அறிவினை ஒத்திருப்பான்; எவர்க்கும் அன்னான் - எவர்க்குமான மன்னன்.
தசரதன் புத்திரன் வேண்டிச் செய்த வேள்வியில் பூதம் சோற்றுப் பிண்டத்துடன் எழுதல்:
ஆயிடை கனலின்நின்று அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று - சூழ்
தீ எரிப் பங்கியும் சிவந்த கண்ணும் ஆய்
ஏயென பூதம் ஒன்று எழுந்தது, ஏந்தியே.
ஆயிடை கனலின் நின்று - அப்போது அந்த வேள்வித்
தீயிலிருந்து; அம்பொன் தட்டம் மீத் - அழகிய ஒரு பொன்
தட்டத்தின் மேலே; தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று - தூய்மையான
அமுதத்தை ஒத்த ஒரு பிண்டத்தை; தீ எரிப்பங்கியும் சிவந்த கண்ணுமாய் - தீ எரிவது
போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக; ஏயென பூதம் ஒன்று - ஏயென்று
ஒரு பூதமானது; எழுந்தது ஏந்தியே- தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை.
ஒருபகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து-பிரளயத்தின்போது எல்லா உலகங்களையும் தனது வயிற்றிலே அடக்கி; அருமறைக்கு உணர்வு அரும்அவனை - அருமறைகளாலும் தெரிந்து கொள்ள இயலாத பரமனை; அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில்காட்டும் சோதியை - கண்மை போன்று கரிய மேகக் கொழுந்தின் அழகைக் ஒத்து நிற்கும் சோதி வடிவாய்த் திகழ்பவனை; திறம்கொள் கோசலை திருஉறப் பயந்தனள் - திறமையுடைய கோசலை மங்கலம் உற ஈந்தாள்.
'இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஒர் ஏழ் ஒடு ஏழ்,
நிறை நிதிச் சாலை தாழ் நீக்கி யாவையும்
முறை கெட வறியவர் முகந்து கொள்க; என
அறை பறை!' என்றனன், அரசர் கோமகன்.
யாண்டும் ஓர் ஏழ் பார்இறை தவிர்ந்திடுக-ஏழாண்டுகள் நாட்டில் திறை செலுத்துவதைச் சிற்றரசர் தவிர்க்க; நிதி நிறைதரு சாலை -செல்வம் நிறைந்த பொருள் பாதுகாப்பறையை; தாள் நீக்கி -தாழ்ப்பாளை அகற்றித் திறந்து வைத்து; யாவையும் வறியவர் முறைகெட முகந்து கொள்க எனா - வரன் முறையில்லாது எல்லாச்
செல்வத்தையும். ஏழை எளியவர்கள் முகந்து கொள்ளுங்கள் என்று; அரசர் கோமகன் பறை அறை என்றனன் -மன்னர் மன்னனான தயரதன் பறை அறைந்து தெரிவியுங்கள் என்றான்.
பிள்ளைகள் பிறந்த மகிழ்ச்சியால் ஏழாண்டுகள் திறை தவிர்க
எனவும். யாவையும் முறைகெட முகந்து கொள்க எனவும் பறை
அறையுமாறு மன்னர் மன்னன் கட்டளையிட்டான்.
'படை ஒழிந்திடுக; தம் பதிகளே இனி
விடைபெறுகுக முடி வேந்தர்; வேதியர்
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக;
புடை கெழு விழா ஒடு பொலிக எங்கணும்.'
முடிவேந்தர் படை ஒழிந்திடுக- நம்மால் சிறை வைக்கப்பட்ட அரசர்கள் எல்லோரும் தம்மைச் சிறைகாக்கும் படைகளிலிருந்து நீங்கட்டும்; இனி தம் பதிகளே விடைபெறுக - இனிமேல் தங்கள் நகரங்களுக்குச் செல்ல விடுதலை பெறட்டும்; வேதியர் நடைஉறு நியமமும் நவை இன்று ஆகுக - வேதம் ஓதுதலில் வல்லவரான வேதியர்கள் தமது ஒழுக்க நியமங்களில் குற்றம் நீங்க நடைபெறட்டும்; புடைகெழுவிழாவொடு பொலிக எங்கணும் - (கோயில்கள்) எங்கும் விழாக் கோலம் பொலியட்டும்.
'ஆலையம் புதுக்குக; அந்தணாளர்தம்
சாலையும் சதுக்கமும் சமைக்க சந்தியும்;
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி
மாலையும் தூபமும் வழங்குக!' என்றனன்.
ஆலையம் புதுக்குக - கடவுளர் கோவில்களை எல்லாம் புதுப்பியுங்கள்; அந்தணாளர் தம் சாலையும் சதுக்கமும் சமைக்க - அறவோர் சாலைகளையும் நாற்சந்திகளையும் அமையுங்கள்; காலையும் சந்தியும் மாலையும் - அந்தி நேரம். காலை. மாலை ஆகிய வேளைகளில்; கடவுளர்க்கு அணிமாலையும் தீபமும் வழங்குக என்றனன் - கோ
Copyright © 2026 R and R Consultant
Total Hits:358478