எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

Kambar, the celebrated Tamil poet and author of the Ramayanam

கம்பர் வரலாறு

்ளார்.

தன்னுடைய தமிழ்ப் படைப்புகளால் தனக்கு அழிவு இல்லை என்று எண்ணிய கண்ணதாசன், கம்பனைப் பற்றி “காலமெனும் ஆழியிலும், காற்றுமழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு, அது தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு” எனக் கூறியுள்ளார்.

கம்பர் எழுதிய ராமாயணம்

(பாடல்கள் வரிகள் பொருளுடன்)

கோசலை நாடு

கம்ப இராமாயணத்தில் தசரதனின் மருத நிலத்து கோசலை நாடு எப்படி இருந்தது என்பதை பின்வருமாறு கூறுகின்றார்:
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ.

தண்டலை மயில்கள் ஆட- சோலைகளிலே மயில்கள் ஆட; தாமரை விளக்கம் தாங்க- தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி நிற்க; கொண்டல்கள் முழவின் ஏங்க- மேகங்கள் மத்தளம் போல ஒலிக்க; குவளை கண் விழித்து நோக்க- குவளைக் கொடிகளில்
மலர்கள் கண்போல் விழித்துப் பார்க்க; தெண் திரை எழினி காட்ட- நீர்நிலைகளின் அலைகள் திரைச்சீலை போலக் காட்ட; தேம் பிழி மகர யாழின்- தேனை ஒத்த மகர யாழ் இசை போல; வண்டுகள் இனிது பாட- வண்டுகள் இனிமையாகப் பாட; மருதம் வீற்றிருக்கும்-இவ்வாறு மருத நாயகி வீற்றிருக்கிறாள்.
கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்,
ஏற்றம் அல்லது, இழித்தகவு இல்லையே.
கூற்றம் இல

« Previous Page 3 of 18 Next »