ில்களில் உள்ள தெய்வங்களுக்கு அழகிய மலர் மாலைகளும் தீபங்களும் வழங்குங்கள் என்றான்.
கரா மலையத் தளர் கை கரி, எய்த்து ஏ,
'அரா அணையில் துயில்வோய்! 'என அ நாள்,
விராவி அளித்து அருள் மெய்ப் பொருளுக்கு ஏ
'இராமன்' எனப் பெயர் ஈந்தனன், அன்றே
கரா மலைய-ஒரு முதலை காலைக் கவ்விக் கொண்டு வருத்த; தளர் கைக்கரி - அதனால் சோர்வுற்ற துதிக்கையை உடைய யானையான கஜேந்திரன்; அரா அணையில் துயில்வோய் என - பாம்பணையில் துயில்பவனே என அழைக்க; அந்நாள் விராவி அளித்தருள் -அந்த நாளிலே விரைந்து அந்த முதலையை அழித்து யானையைக்
காத்தருளிய; மெய்ப்பொருளுக்கு - உண்மைப் பொருளான அப்பரமனுக்கு; ‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனர் - இராமன் என்னும் பெயரை (வசிட்டன்) சூட்டினான்.
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே
ஓவிய எழில் உடை ஒருவனை அலது, ஓர்
ஆவியும் உடலமும் இலது என, அருளின்
மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன்
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே - நீலோற்பல மலரையும் இடையே ஒளிரும் தாமரைகளும் எனுமாறு; ஓவிய எழில் உடை ஒருவனை - ஓவியம் போன்ற அழகுடைய ஒப்பற்ற ஒருவனாகிய ராமனை; அலதோர் ஆவியும் உடலுமு் இலதென - அல்லது. வேறு உயிரும். உடலும் தனக்கு இல்லை எனும்படி நினைத்து; உலகுடைய வேந்தர்தம் வேந்தன் - உலகனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆளும் மன்னர் மன்னனான தயரதன்; அருளின் மேவினன் - அருள் உடையவனாய் வாழ்ந்திருந்தான்.
சவுளமொடு உபநயனமும் முறை தருகுற்று,
இ அளவது என ஒரு கரை பிறிது இல வாய்,
உவள் அரு மறையின் ஒடு ஒழிவு அறு கலையும்,
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே.
சவுள மொடு உப நயம் - சவுளம். உபநயனம் முதலாகிய சடங்குகளை; விதிமுறை தருகுற்று - விதிப்படி செய்து; இ அளவது என -இந்த அளவுடையது எனக் கூறும்படியான; ஒருகரை பிறிது இலவா-ஒரு எல்லை வேறு எனச் சொல்ல இயலாதபடி; உவள் அருமறையின் ஒடு - தூய்மையான வேதங்களுடன்; ஒழிவு அறு கலையும்- நீங்காத கலைகள் பலவற்றையும்; தவன் மதிபுனை அரன்நிகர் முனிதரவே - சந்திரனைத் தலையில் அணிந்துள்ள சிவபெருமானுக்கு ஒப்பான வசிட்ட முனிவன் கற்றுத்தர.
இன் தளிர்க் கற்பகம் நறும் தேன் இடை துளிக்கும்
நிழல் இருக்கை இழந்து போந்து
நின் தளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கிக்,
குறை இரந்து நிற்ப, நோக்கிக்
குன்று அளிக்கும் குலம் மணித் தோள் சம்பரனைக்
குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு,
அன்று அளித்த, அரசு அன்று ஓ புரந்தரன்
இன்று ஆள்கின்றது; அரச! என்றான்.
அரச புரந்தரன் இன்று ஆள்கின்றது-தயரத மன்னனே! இந்திரன் இன்று ஆண்டு கொண்டிருக்கும் அமர ருலக ஆட்சி; இன்தளிர்க் கற்பக நறும்தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை - இனிய தளிர்களை உடைய கற்பக மரத்தின் பூக்கள் தேனை இடையிடையே துளிக்கின்ற நிழலை உடைய ஆசனத்தை; இழந்து போந்து - இழந்து விட்டு உன்னிடம் வந்து; நின்று அளிக்கும் தனிக்குடையின் நிழல் ஒதுங்கி - உலகனைத்தையும் நின்று காக்கின்ற உனது ஒப்பற்ற வெண்குடை நிழலில் ஒதுங்கி நின்று; குறை இரந்து நிற்ப நோக்கி - தனது குறைகளைச் சொல்லி யாசித்து நிற்க. நீ அதைப் பார்த்தபின்; குன்று அளிக்கும் குலமணித் தோள் சம்பரனை - மணிகளால் அலங்கரிக்கப்பட்ட குன்று போன்ற தோள்கயைுடைய சம்பரன் என்ற அசுரனை குலத்தோடும் தொலைத்து - அவனது கூட்டத்தாரோடும் அழித்து; நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ - நீ உனதாக ஆக்கிக் கொண்டு. அன்று இந்திரனுக்குத் தந்த அரசை அல்லவா; புரந்தரன் இன்று ஆன்கின்றது என்றான் - அவ்விந்திரன் இன்றளவும் தன்குரியதாக ஆட்சி செய்து வருவது என்று முனிவன் கூறினான்.
"தரு வனத்துள் யான் இயற்றும் தவ வேள்விக்கு
இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி
என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி” என உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.
தருவனத்துள் யான் இயற்றும் - மரங்கள் நிறைந்துள்ள காட்டில் நான் செய்கின்ற; தவவேள்விக்கு இடையூறா - பெரிய யாகத்துக்கு இடையூறாக; தவம் செய்வோர்கள் வெருவர - தவம் செய்பவர்கள் அஞ்சும்படியாக; சென்று அடைகாம வெகுளி என - அவர்தம் மனத்தைச் சென்று சேர்ந்த காமம். வெகுளி மயக்கங்களைப் போல; நிருதர் இடைவிலக்காவண்ணம் - அரக்கர்கள் கெடுக்காதபடி; செருமுகத்துக் காத்தி என - அவர்களோடு செய்யும் போர் முகத்திலே காத்தருள் வாயாக என; நின் சிறுவர் நால்வரினும் - உன்புத்திரர்கள் நால்வர்களுள்; கரிய செம்மல் ஒருவனை - கருமை நிறம் பொருந்திய செம்மலாகிய ஒப்பற்றவனை; தந்திடுதி என - அளித்திடுவாயாக என்று; உயிர் இரக்கும் கொடும் கூற்றின் - உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல; உளையச் சொன்னான் - மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான்.
எண் இலா அருந்தவத்தோன் இயம்பிய சொல்,
மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால்
எனச் செவியில் புகுதலோடும்,
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த
ஆர் உயிர் நின்று ஊசல் ஆடக்
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்
கடும் துயரம் கால வேலான்.
எண்இலா அருந்தவத்தோன் - எண்ண முடியாத அரிய தவத்தைச் செய்த விசுவாமித்திரர்; இயம்பிய சொல் - சொன்ன இந்தச் சொற்களானது; மருமத்தின் எறிவேல் பாய்ந்து-மார்பின் மேல் எறிந்த வேல் பாய்ந்த: புண்ணில் ஆம் பெரும் புழையில் - புண்ணாகிய புழையிலே; கனல் நுழைந்தால் என - கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போல; செவியில் புகுதலோடும் - தனது காதுகளில் புகுந்த போது; உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த - உள்ளத்திலே நிலைத்துள்ள துயரம் (உயிரை) வெளியே தள்ள; ஆர் உயிர் நின்று ஊசல் ஆட - தயரதனது அவ்வரிய உயிர் (உள்ளே போகவும். வெளியே வரவுமாக) ஊசல்போல் ஆட; கண்இலான் பெற்று இழந்தான் என - கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தான் எனக் கூறும்படி; காலவேலான் கடுந்துயரம் உழந்தான் - பகைவனின் உயிருக்கு இறுதிக்காலம் காட்டும் வேலையுடைய தயரத வேந்தன் கடுமையான துன்பத்தினாலே மிகு வருந்தினான்.
வந்த நம்பியைத் தம்பி தன்னோடு
முந்தை நால் மறை முனிக்குக் காட்டி,'நல்
தந்தை நீ,தனித் தாயும் நீ, இவர்க்கு
எந்தை! தந்தனன்; இயைந்த செய்க' என்றான்.
வந்த நம்பியை - அவ்வாறு அருகு வந்து சேர்ந்த நம்பியாகிய இராமனை; தம்பி தன்னொடும் - ராமனை விட்டு நீங்காத தம்பியான இலக்குவனோடும்; முந்தைய நான்மறை முனிக்குக் காட்டி - பழைய வேதங்களை அறிந்தநல் முனிவனாகிய விசுவாமித்திரனுக்குக் காட்டி; நல்தந்தை நீ தனித்தாயும் நீ இவர்க்கு -இந்த குமாரர்களுக்கு இனித் தாயும் தந்தையும் நீங்களே தாம்; எந்தை தந்தனன்-எந்தையே! இவர்களைத் தங்களிடம் கொடுத
Copyright © 2026 R and R Consultant
Total Hits:358479